News November 30, 2024

கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடு –  முதல்வர் ரங்கசாமி ஆய்வு

image

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கடற்கரைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் நேற்று முதல்வர் ரங்கசாமி, கடற்கரையை பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இயங்காதவாறு பார்க்க அறிவுறுத்தினார்.

Similar News

News September 13, 2025

புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று(செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News September 12, 2025

டென்னிஸ் விளையாடிய முதக்வர் ரங்கசாமி

image

புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி இன்று கோரிமேடு என்.ஆர் டென்னிஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

News September 12, 2025

புதுவை EX CM பொய் பேசுவதை நிறுத்த வேண்டும்!

image

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், EX CM நாராயணசாமியின் தவறான பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பில் பதில் அளிக்காததால், தொடர்ந்து பொய் பேசுவதையே வழக்கமாக நாராயணசாமி கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தனது 5ஆண்டு கால திமுக.காங் கூட்டணி ஆட்சியையும் தற்போதைய தேசிய ஜனநாயக ஆட்சியையும் நாராயணசாமி ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!