News September 10, 2025

கடற்கரையில் ஆண் பிணம். போலீசார் விசாரணை

image

காரைக்கால் நிரவி கருக்களாச்சேரி கடற்கரையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த நிரவி போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 10, 2025

புதுவையில் குடிநீரை வைத்து அரசியல் நாடகம் !

image

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். புதுவையில் சுகாதாரமற்ற குடிநீரால் சிலர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.இது மிகவும் வருத்தமளிக்க கூடியது. இதை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஆளுநர் , முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

புதுச்சேரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

image

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றியை கொண்டாடும் வகையில் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே மாநிலத் தலைவர் VP.ராமலிங்கம் (Ex-MLA) தலைமையில் இன்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் மாநில, மாவட்ட , தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 10, 2025

புதுச்சேரி: 3வது சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் ஷர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்புகளுக்கான 3வது சுற்று தற்காலிக சீட்டு ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் டேஷ்போர்டு உள்நுழைவு சான்றுகளை பயன்படுத்தி தங்களது சீட்டு ஒதுக்கீடு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 11 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!