News January 19, 2026
கடற்கரைகளில் குப்பை கொட்டிய 241 பேருக்கு ரூ.1.90 லட்சம் அபராதம்

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 28, 2026
4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு – முதல்வர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ’திமுக ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இன்று பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் 4,000-வது குடமுழுக்கு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் மதவாத அரசியல் செய்வோருக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News January 28, 2026
சென்னை ஒன் செயலி: 40லட்சம் டிக்கெட் விற்பனை

சென்னை ஒன் செயலி மூலம் இதுவரை 40லட்சம் டிக்கெட்டுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரயில், மெட்ரோ, பேருந்து போக்குவரத்தை ஒன்றாக இணைக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ‘சென்னை ஒன்’ செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த செயலி மூலம் 40லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


