News May 13, 2024

கடமலைக்குண்டு அருகே இருதரப்பு மோதல்

image

தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் குடும்பத்திற்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. அதன் காரணமாக நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அடிதடி நடந்தது. சிவக்குமாரின் மகளை கையை பிடித்து இழுத்ததாகவும் , சிலம்பரசனின் தாய் ஜெயலட்சுமியின் சேலையை பிடித்து இழுத்ததாகவும் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். 

Similar News

News November 5, 2025

தேனி: 10th போதும்; தேர்வு இல்லாமல் அரசு வேலை

image

தேனி மக்களே, மத்திய அரசின் அணுசக்தித் துறையில் 405 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 10th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து நவ.15க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.9,600 – 10,560 வரை வழங்கப்படும். தேர்வு மற்றும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மதிப்பென் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

News November 5, 2025

தேனியில் 5 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

image

தேனி மாவட்டத்தில் 5 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார். சுருளி தேர்தல் பிரிவு தாசில்தாரராகவும், செந்தில்குமார் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு தனி தாசில்தாரராகவும், உதயராணி பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாரராகவும், சுந்தர்லால் அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகம், சரவணபாபு, ஆதிதிராவிடர் நலம் பிரிவு தனி தாசில்தாரராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News November 5, 2025

தேனி: வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (44). இவரது மகளுக்கு பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் எழுத்தர் வேலை வாங்கி தருவதாக கூறி வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த ராஜகோபால் (42), அவரது நண்பரான கரூர் முருகேசன் (48) ஆகியோர் 2022-ல் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி பெரியகுளம் போலீசார் ராஜகோபால், முருகேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!