News April 26, 2024
கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

மண்ணச்சநல்லூர் அருகே கீழக்கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (32). இவர் சொந்தமாக முறுக்கு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் பலரிடம் கடன் வாங்கி, பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
திருச்சி: சுடுகாட்டில் அமைந்துள்ள காலபைரவர் கோவில்

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோவில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தளத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!
News April 20, 2025
TNPSC குரூப் 4 மாதிரி தேர்வு-ரொக்கப் பரிசு அறிவிப்பு

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், ரோட்டரி கிளப் சார்பில், TNPSC குருப் 4 போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு 21.04.2025 காலை 10 முதல் 1.30 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 5 பேருக்கு முதல் பரிசாக ரூ.1000, 2ம் பரிசாக ரூ.750, 3ம் பரிசாக தலா ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்ங்க…
News April 20, 2025
குறுக்கே வந்த தள்ளுவண்டி – மெக்கானிக் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து அழககவுண்டம்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் டூவீலர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது வடக்கு இடையபட்டி என்ற இடத்தில் தண்ணீர் பிடித்து சென்ற தள்ளு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.