News November 28, 2025

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

image

பெருந்துறை துடுப்பதி சாணார்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன் (28). எலக்ட்ரீசியன். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் காணப்பட்டார். தன்னுடன் பழகியவர்களிடம் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தமிழரசன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

அம்மாபேட்டை அருகே வசமாக சிக்கிய இருவர்

image

அம்மாபேட்டை அருகே சொட்டையனூர் பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை கடத்த முயன்ற சங்ககிரி பகுதியை சேர்ந்த சக்திவேல் 32 மற்றும் சித்தார் பகுதியை சேர்ந்த முனியசாமி 50 ஆகிய இருவரை பிடித்த அம்மாபேட்டை போலீசார் 10 கிலோ குட்கா பாதை பொருட்களை பறிமுதல் செய்து இருவரும் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

News November 28, 2025

ஈரோடு பெண் கொலை வழக்கில் திருப்பம்!

image

ஈரோடு சூலை எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட நபர் நேற்று அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தில் போலீசார் மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவரை கோவையில் வைத்து மடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளியை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

News November 28, 2025

ஈரோடு பெண் கொலை வழக்கில் திருப்பம்!

image

ஈரோடு சூலை எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட நபர் நேற்று அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தில் போலீசார் மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவரை கோவையில் வைத்து மடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளியை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!