News August 18, 2025

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

குமாரபாளையம் அருகே உள்ள பாலக்கரை பகுதி சேர்ந்த நாகராஜ் விசைத்தறி கூலி தொழிலாளி. தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ள நிலையில் அதிக அளவு கடன் பெற்றதால் நிதி நிறுவனத்தின் கடனை கட்ட அவருக்கு நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மணமுடைந்த அவர் இன்று காலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 6, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (06.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கல்லில் இன்று நவம்பர் 6ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது இதனால் இன்று 5 காசுகள் உயர்த்தப்பட்டது. எனவே இன்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.55 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது நேற்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது குறிப்பிடதக்கது

News November 6, 2025

நாமக்கல்: வங்கியில் வேலை! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!