News May 23, 2024

கடத்தல் வாகனம் ஏலம் – உரிமை கோர கால அவகாசம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பண்டங்களை லாபநோக்கில் விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்ட வழக்கில் 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை யாரும் உரிமை கோராததால் ஏலம் விடப்பட உள்ளது. மேற்படி உள்ள வாகனங்கள் தங்களுடையது என்று கருதினால் அசல் ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலகத்தை அனுக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

தஞ்சையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

பிரதமர் மோடி பங்கேற்கும் திருச்சி பொதுக்கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 06) தஞ்சையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்குப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மேலும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

News March 7, 2026

தஞ்சாவூர்: 34 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி!

image

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில், சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதிநேர வேலை என ஆசை காட்டி 34 பேரிடம் சுமார் ரூ.1.50 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் ஆசிரியர்கள், விவசாயிகள், தனியார் ஊழியர்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரை அடுத்து, தஞ்சாவூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் 34 வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்!

image

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் உயர்மட்ட‌ பாலம் கட்டும் பணிகள்‌ நடைபெற‌ உள்ளதால், வரும் மார்ச் 9-ம் தேதி முதல், கும்பகோணம் – திருவையாறில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கீழவாசல் வழியாக செல்ல வேண்டும். இதேபோல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மேலவீதி, பழைய திருவையாறு சாலை வழியாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!