News April 8, 2024

கஞ்சா விற்பனை செய்த இளைஞன் கைது 

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட புதிய ரயில்வே நிலையம் மேம்பாலம் அருகே பெரிய காஞ்சிபுரம் மளிகை செட்டி தெரு பகுதியை சேர்ந்த தினேஷ் (25) என்பவர் வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி சிறுபொட்டலமாக செய்து விற்பனை செய்து வந்த நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை போலீசார் தினேஷ் கைது செய்து சிறையில் அடைத்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். 

Similar News

News January 23, 2026

காஞ்சியில் 4 பேர் அதிரடி கைது!

image

மாடம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் துரையை கடந்த 14-ஆம் தேதி நடைப்பயிற்சியின் போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்தித் தாக்கியது. பின்னர், அவரிடமிருந்து ‘ஜி-பே’ மூலம் 8,000 ரூபாயைப் பறித்துக்கொண்டு பாதியில் இறக்கிவிட்டுத் தப்பினர். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார், தலைமறைவாக இருந்த சஞ்சய், பிரதீப் குமார், முகமது ரியாசுதீன் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர்.

News January 23, 2026

காஞ்சி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

காஞ்சிபுரம் மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

News January 23, 2026

காஞ்சி: மாற்றுத்திறனாளி வயிற்றில் அடித்த ஹோட்டல்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமத்தில், உணவகத்தில் வேலை பார்த்து வந்த ரமேஷ் (38) என்ற மாற்றுத்திறனாளி சம்பள பாக்கியை வழங்காததால் மதுபோதையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!