News May 30, 2024

கஞ்சா கடத்திய 6 பேருக்கு 10 ஆண்டு சிறை!

image

மதுரை பேரையூர் காளப்பன்பட்டி பகுதியில் கடந்த 2022ல் 85 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் பேரையூர் காளப்பன்பட்டியை சேர்ந்த ஆனந்தன், ஆனந்தகுமார் ,ஆந்திராவை சேர்ந்த தேவராஜ்,பாலவெங்கட சிரிபாபு,
ராஜசேகர், ஹரிஸ் ஆகிய 6 பேர் கைதாகினர். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 6 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

Similar News

News September 11, 2025

மதுரையில் ஹரியானா மாநிலத்தவர் பரிதாபமாக பலி

image

ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தென்கரை அருகே லாரி வந்தபோது லாரியை நிறுத்தி உதவியாளர் முஃபீத் சாலையோரம் இயற்கை உபாதைக்காக சென்றார். திருப்பி வரும்போது பின்னாலிருந்து வந்த லாரி அவர் மீது மோதியதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.

News September 11, 2025

மதுரை: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

மதுரை மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<> இங்கு கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 11, 2025

மதுரையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில்

image

மதுரையில் இருந்து பீகாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 17-ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. மதுரை-பரூணி சிறப்பு ரயில் வண்டி எண் 06059 மதுரையில் இருந்து வருகிற 17-ஆம் தேதி 24ஆம் தேதி மற்றும் நவம்பர் 3,15 ,22, 29 இயக்கப்பட இருக்கிறது. அதேபோன்று மறு மார்க்கமாக வண்டி எண் 06060 வருகிற 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமை புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு மதுரை வந்தடையும்.

error: Content is protected !!