News April 29, 2025

கஞ்சனூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

image

மேல்காரணை கன்னியப்பன் மகன் தன்ராஜ்(22). நேற்று அதே பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். கிணற்றில் குதித்தவர் மேலே வரவில்லை. அவருடன் குளித்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் கஞ்சனுார் போலீசார், அன்னியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தன்ராஜ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 22, 2025

விழுப்புரம்: உயிர் நண்பனை கழுத்தறுத்து கொன்ற இருவர் கைது

image

பண்ருட்டி அருகே கார்த்திகேயன் என்பவர் தனது 2 நண்பர்களோடு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 2நண்பர்கள் சேர்ந்து கார்த்திகேயனை கழுத்தை அறுத்துக்கொன்று குளத்தில் வீசியுள்ளனர். கார்த்திகேயன் வீடு திரும்பாத நிலையில் 3 நாள் கழித்து சொக்கநாதர் குளத்தில் இருந்து அழுகிய நிலையில் 18ஆம் தேதி அவரின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 2 நண்பர்களையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

News September 22, 2025

விழுப்புரம்: நவராத்திரியில் இதை பண்ணுங்க!

image

நவராத்திரி வழிபாட்டை கொலு, கலசம், படம், அகண்ட தீபம் என 4 வழிகளில் மேற்கொள்ளலாம். கொலுவில், படிகளை 3, 5, 7, 9, 11 என ஒற்றைப்படையில், கிழக்கு/வடக்கு திசையில் அமைக்க வேண்டும். பொம்மைகளை பரிணாம வளர்ச்சிப்படி (முதல் படி ஓரறிவு,6ஆம் படி மனிதர்கள், 9ஆம் படி தேவியர்/கலசம்) 9ஆம் படியில் முப்பெரும் தேவியரும், கலசமும் வைப்பது அவசியம். விழுப்புரம் மேல்மலையனுர் அம்மன் கோயிலில் வழிபடுவது மிகவும் நல்லது.ஷேர்

News September 22, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.21 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!