News August 15, 2025

ஓரினச்சேர்க்கை ஆப் மூலம் வழிப்பறி: 7 இளைஞர்கள் கைது

image

சாயல்குடி அருகே இருவேலி பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையான ஏழு இளைஞர்கள், ஓரினச்சேர்க்கை ஆப்பைப் பயன்படுத்தி கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றி, ₹40,000 மதிப்புள்ள செல்போன், வெள்ளிக் கொடி மற்றும் பணத்தை பறித்தனர். பாதிக்கப்பட்டவரின் புகாரை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஏழு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.

Similar News

News March 5, 2026

ராம்நாடு : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

image

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 5, 2026

இராமநாதபுரம்: வேலை வாய்ப்பு பயிற்சி

image

இராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், அரசு போட்டி தேர்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் (மார்ச், 9) தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

ராம்நாடு : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

இராமநாதபுரம் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!