News August 19, 2025

ஓய்வு பெற்ற பாண்லே ஊழியர் தற்கொலை

image

புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (68). இவர் ஓய்வு பெற்ற பாண்லே ஊழியர் ஆவார். இந்நிலையில், தேவநாதன் கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டின் அருகே தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 19, 2025

புதுவை: 10th போதும் இந்தியன் வங்கியில் வேலை

image

புதுச்சேரி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Attender பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த பணிக்கு மாதம் ரூ.14,000 சம்பளம், ஊக்கத்தொகை ரூ.1,000, போக்குவரத்து செலவு ரூ.1,000, மொபைல் ரீசார்ச் ரூ.300 ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW

News August 19, 2025

புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை!

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை விட்டு, விட்டுப் பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆக.17) இரவு கனமழை பெய்தது. இதனை அடுத்து, நேற்று (ஆக.18) வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் படி, புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW.

News August 19, 2025

புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு கன மழை பெய்தது. இன்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் படி புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!