News August 26, 2025
ஓட்டேரி ஏரியை தூர்வார கோரிக்கை

வேலூர் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஓட்டேரி ஏரி உள்ளது. இந்த ஏரி 106 ஏக்கர் பரப்பளவுடன் சுமார் 140 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் ஏரி முழுவதும் தற்போது செடி, கொடிகள், சீமைக்கருவேல மரங்களும் அதிகளவில் வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளது. ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News August 26, 2025
வேலூர்: B.E, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Sc,BCA, MCA,M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 26, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து நடக்கிறது. வேலூர், காட்பாடி, அரக்கோணம், சூரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு செய்ய உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 25, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்!

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.