News June 4, 2024
ஓட்டு எண்ணிக்கை முடிவு: சிறப்பு குழு அமைப்பு

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தற்போது தெரிவித்ததாவது: நெல்லை பத்திரிகையாளர்கள் பாளை அரசு பொறியியல் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள நுழைவு வாயில் வழியாக ஊடக மையத்திற்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர்களுக்கு ஓட்டு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளிக்க பிஆர்ஓ தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Similar News
News August 21, 2025
பண மோசடி குறித்து நெல்லை காவல் துறை எச்சரிக்கை

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பிக்சட் டெபாசிட் மற்றும் கடன்கள் தொடர்பான OTP விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் இத்தகைய அழைப்புகளுக்கு எந்த தகவலையும் அளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று உறுதி செய்ய வேண்டும் என்றும் நெல்லை SP சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
News August 20, 2025
நெல்லையில் அரசு பள்ளி மாணவனின் சாதனை

திருநெல்வேலி அரசு மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர் மணிகண்டன், 7.5% இட ஒதுக்கீடு இல்லாமல், நீட் தேர்வில் 522 மதிப்பெண்கள் பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து, தனது சொந்த முயற்சியால் இந்தச் சாதனையைப் படைத்த தமிழ்நாட்டின் ஒரே மாணவர் இவரே. இவரின் இந்த வெற்றி, பலருக்கும் உத்வேகம் அளிக்கும்.
News August 20, 2025
நெல்லை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

நெல்லை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க… இங்கு <