News April 19, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

போக்குவரத்து கழகத்தில் 1004 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த <
Similar News
News February 28, 2026
ராணிப்பேட்டை; திடீர் சாலை மறியலால் பரபரப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், மாங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகக் கூறி, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், செய்யாறு செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News February 28, 2026
ராணிப்பேட்டை: துடிதுடித்து பலி

ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் சபீர் திமிரி வழியாகச் சென்றபோது மருத்துவம்பாடி அருகே அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திமிரி காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 28, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (பிப்-27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


