News January 6, 2025
ஓடும் ரயிலில் இறங்க முயற்சித்த போது தவறி விழுந்து பலி

ஜோலார்பேட்டை அருகே பார்சம்பேட்டை ஜெய் மாதா நகரைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் தனது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்பதற்கு முன்பு ஓடும் ரயிலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் விசாரணை செய்கின்றனர்.
Similar News
News February 3, 2026
‘வெளிநாட்டில் வேலை – இணைய செய்திகளை நம்ப வேண்டாம்’!

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை விழிப்புணர்வு செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், ‘இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது தொடர்பாக இணையத்தில் வரும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 3, 2026
திருப்பத்தூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News February 3, 2026
திருப்பத்தூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <


