News March 20, 2025

ஓடத்துறை பாலத்தில் உயிரிழப்பு

image

மல்லியம்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(61) இன்று டூவிலரில் ஓடத்துறை பாலத்தில் சென்றபோது நிலை தடுமாறி பாலத்தின் சுவரில் மோதி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே கண்ணதாசன் உயிரிழந்தார். இதையறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News August 17, 2025

திருச்சி: மருங்காபுரியில் லாட்டரி விற்றவர் கைது

image

திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு போலிசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது மருங்காபுரி நடுத்தெருவில் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன் (46) என்பவர் லாட்டரி விற்ற போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து ரொக்கம் ரூ.14000 மற்றும் லாட்டரி எண்கள் குறிக்கப்பட்ட ஒரு பேப்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

News August 16, 2025

திருச்சி: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

image

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500/- சம்பளம் முதல் Rs.88,638 வரை வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் <>இங்கே கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பிக்கவும். SHARE IT Now

News August 16, 2025

திருச்சி: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

image

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

error: Content is protected !!