News April 6, 2024
ஓசூர்: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

ஓசூர் அருகே சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்
வாகனத்தில் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்த நிலையில், அவற்றில் 45 பெட்டிகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்கள் இருந்தன. நகையை கொண்டு வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 19, 2025
JUST IN: கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,80,626-ல் இருந்து 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று (டிச.19) அறிவித்துள்ளார்.
News December 19, 2025
கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News December 19, 2025
கிருஷ்ணகிரி: மனநல பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொடுமை

கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது இளம்பெண்ணை கடந்த 2021-இல் பாலியல் வன்கொடுமை செய்த அதே ஊரைச் சேர்ந்த சேம் ரிவெத் (41) என்பவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று (டிச.18) இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளிக்கு 5 ஆண்டு கூடுதல் சிறையும் விதிக்கப்பட்டு, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி லதா உத்தரவிட்டார்.


