News August 14, 2025

ஓசூர் பகுதியில் பயங்கர விபத்து

image

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் அருகே இன்று (ஆகஸ்ட் 14) கோப சமுத்திரம் பகுதியில் உள்ள சாலையில் பெரிய கனரக லாரி ஆனது இரண்டு கார்களின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 14, 2025

கிருஷ்ணகிரியின் குட்டி இங்கிலாந்து எது தெரியுமா?

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தளி பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து என்ற சிறப்பு பெயர் உண்டு. அடர்ந்த வனப்பகுதி மற்றும் குளிர்ந்த இதன் வானிலை இங்கிலாந்தை ஒத்திருப்பதால் ஆங்கிலேயர்கள் தளியை “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைத்து வந்தனர். சிறப்பு பெயருக்கு ஏற்ப குளிர்ந்த சூழலோடு, அறியப்படாத சுற்றுலா தலமாக தளி உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர்சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் தினேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை,வருவாய் அலுவலர் ,சாதனைகுரல் இந்து அமைப்பினர் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பான முறையில் நடத்த வழிமுறைகள், அனுமதி பெறுவது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, ஊர்வலம் நடத்துவது, சிலைகள் கரைப்பது பற்றி அறிவுறுத்தப்பட்டது.

error: Content is protected !!