News February 27, 2026
ஓசூர்: சசிகலாவை விளாசிய கே.பி.முனு சாமி!

ஓசூரில் நேற்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனு சாமி பேசியதாவது, ”அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் வந்தவர் சசிகலா. கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்த ஒரு குடும்பம். இன்று எடப்பாடி பழனிசாமி மீது கொலை முயற்சி பழி சுமத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது” என விமர்சித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான இணைய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இணையதளங்களில் உள்நுழையும் போது ‘Keep me logged in’ அல்லது ‘Remember me’ போன்ற வசதிகளை குறிப்பாக பொது கணினிகளில் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு செய்தால் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
News March 10, 2026
கிருஷ்ணகிரி போலீஸ் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு எதிராக மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் தீவிர விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. “மது உடல்நலத்திற்கு கேடு, புகை உயிரைக் கொல்லும்” என எச்சரித்துள்ள போலீசார், ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
News March 10, 2026
பர்கூர் துணி இதனால்தான் இவ்வளோ ஃபேமஸா?

கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பர்கூர். இங்கு 75 ஆண்டு காலமாக துணி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் துணி வாங்க வந்து செல்கின்றனர். மற்ற பகுதிகளை காட்டிலும் இங்கு விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளதே மக்கள் குவிய காரணம். இதனால் இது ‘குட்டி சூரத்’ என்றழைக்கப்படுகிறது.


