News March 2, 2026

ஓசூர்: கடத்தலில் ஈடுபட்ட போலீஸ்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று (மார்ச் 1) சிப்காட் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் 528 கர்நாடக மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த நாகரசம்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் நாகராஜ் (41) என்பவரை போலீஸார் கைது செய்தனர். சட்டவிரோத விற்பனைக்காக மது கடத்திய அவர் மீது, தற்போது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 2, 2026

கிருஷ்ணகிரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 2, 2026

கிருஷ்ணகிரியில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்!

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தளி தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தர்க்கரசன் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளை தீவிர படுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

News March 2, 2026

கிருஷ்ணகிரி: ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த இளைஞர்!

image

தேன்கனிகோட்டை அருகே கோட்டைவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜிபிசன். இவர் மத்திகிரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்று முன்தினம் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஜெபிசன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!