News December 31, 2024

ஓசூர் ஏரியில் கழிவுநீர் கலந்த லாரி ஓட்டுநர் கைது

image

ஒசூா் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டேங்கர் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீர் ஏரியில் கலக்கப்பட்டது கண்ட போலீசார் அந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் காவேரியூரை சோ்ந்த திருநாவுக்கரசு என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் நிறுவன கழிவுநீரை ஏரியில் கலந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News November 9, 2025

கிருஷ்ணகிரி: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நவ.26ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

கிருஷ்ணகிரி: குளியலறையில் கேமரா – அடுத்தடுத்து ஷாக்!

image

கெலமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்து விடியோ எடுத்த வழக்கில், டெல்லியில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் சிங் விசாரணையில், கேமரா வைத்தது தொடர்பாக அவரிடம் 2 நாள்கள் போலீஸார் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், சமூக வலைதளங்களில் அவர் ஆபாச வீடியோக்களை பகிரவில்லை என தெரிகிறது. பின்னர் அவர் தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.

News November 9, 2025

கிருஷ்ணகிரி: MLA-களுக்கு பரந்த உத்தரவு!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், ‘உடன்-பிறப்பே வா’ என்ற தலைப்பில், தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். இந்த கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று (நவ.08) நடந்தது. இந்நிலையில், “ஓசூர், தளி மற்றும் வேப்பனஹள்ளி தொகுதிகிகளில் திமுக வெற்றிபெற வேண்டும்”. என முதல்வர் மு.க.ஸ்டாலின் MLA-களுக்கு அறிவுறுத்தினார்..

error: Content is protected !!