News January 17, 2026

ஓசூர்: அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்

image

ஓசூர் அடுத்த மத்திகிரி பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரகிபுல் உசேன் (39) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று (ஜன.16) காலையில் அவரது நிறுவனத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து மத்திகிரி போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

கிருஷ்ணகிரியில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04343-292275) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

கிருஷ்ணகிரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04343 – 232830 தெரிவியுங்க. SHARE IT!

News January 26, 2026

கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

கிருஷணகிரிக்குட்பட்ட மின் நிலையங்களில் நாளை (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி சிகரலபள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, சி.கே.பட்டி, வெங்கடச முத்திரம், தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம், ஜெகதேவி, சத்தலட் பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.

error: Content is protected !!