News October 24, 2024

ஓசூர் அருகே தரைப்பாலத்தை மூழ்கிய ரசாயன நுரை

image

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு நான்காயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் தண்ணீரில் அதிகப்படியான கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதால் சுமார் 5அடி உயரத்திற்கு ரசாயன நுரைகள் பொங்கியபடி வருகிறது. இதனால் நந்திமங்கலம் சாலையில் உள்ள தட்டனப்பள்ளி அருகேயுள்ள தரைப்பாலம் ரசாயன நுரையில் மூழ்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News

News February 12, 2026

கிருஷ்ணகிரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News February 12, 2026

கிருஷ்ணகிரி: பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த ஆட்சியர்

image

கிருஷ்ணகிரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான ‘ஆற்றல் மன்றம்’ ஒருநாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் குத்துவிளக்கேற்றி இப்பயிற்சியைத் தொடங்கி வைத்தார். எரிசக்தி சேமிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு இதில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

News February 12, 2026

கிருஷ்ணகிரி: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!