News September 27, 2025
ஓசூரை உலுக்கிய சூதாட்ட வழக்கு.. போலீசார் அறிவுறுத்தல்!

ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் நேற்று நள்ளிரவில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது ரூ 8,58,000 பணத்துடன் அவர்கள் சிக்கினர். இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட டிஎஸ்பிகள் இணைந்து குறிவைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதுபோன்ற சூதாட்டம் நடந்தால் பொதுமக்கள் பயப்படாமல் காவல்துறையிடம் தகவல் அளிக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் நேற்று (செப்-26) அறிவுறுத்தினர்.
Similar News
News October 16, 2025
கிருஷ்ணகிரி மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
News October 16, 2025
கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு இடமா!

கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி அருகே மல்லச்சந்திரம் மோரல்பாறையின் மீது கற்திட்டைகள் உள்ளன. இவை இறந்தவர்களின் நினைவாக சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். இவை 1மீ முதல் 2.6மீ வரை உயரம் கொண்டதாக உள்ளது. இவற்றில் சில ஓவிங்களும் காணப்படுகின்றன. நம்ம ஊரில் இப்படி ஒரு இடம் இருப்பது பலருக்கும் தெரியவில்லை. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News October 16, 2025
கிருஷ்ணகிரி: உங்க ஆதார் கார்டை வேறுயாராவது யூஸ் பண்றாங்களா?

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்