News September 17, 2025
ஓசூரில் 2 இளைஞர்கள் விபத்தில் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அசோக்குமார் மகன் நவீன் (19) தர்மபுரி மாவட்டம், பாலாலஹள்ளியை சேர்ந்த சுதர்சன் (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதில் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செப்டம்பர் 19 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News September 17, 2025
கிருஷ்ணகிரி: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

<
News September 17, 2025
கிருஷ்ணகிரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

கிருஷ்ணகிரியில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ஓசூர் மாநகராட்சி – ஆர்.வி.அரசு மேல்நிலை பள்ளி
✅ ஓசூர் மாநகராட்சி – ஆச்சுவாஸ் அகாடமி மெட்ரிகுலேஷன் பள்ளி, ரிங்க் ரோடு
✅ ஊத்தங்கரை – அரசு உயர்நிலை பள்ளி, நாய்க்கனுர்
✅ தளி – அரசு உயர்நிலைப் பள்ளி, தக்கட்டி
✅ காவேரிப்பட்டினம் – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நரிமேடு (SHARE IT)