News January 25, 2026
ஓசூரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஓசூர் பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை (ஜன.26) குடியரசு தினம் கொண்டாடுவதை ஒட்டி, ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. ஸ்ரீதரன் தலைமையில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டன. மேலும், ஜூஜூவாடி உள்ளிட்ட மாநில எல்லைச் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையைப் பலப்படுத்திச் சோதனை செய்து வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
கிருஷ்ணகிரி: சாலையில் பறிபோன உயிர்!

வேப்பனப்பள்ளி அடுத்த திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிசாமி, சந்திரன். இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னே வந்த லாரி மோதி பைக் விபத்துக்குளானது. இதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 31, 2026
கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

காவேரிப்பட்டிணத்தை சேர்ந்தவர் பசுபதி. இவர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தென்பண்ணை ஆற்றின் அருகே இவர் தனது தாய் மங்கம்மாளுடன் சேர்ந்து பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை ஆற்றில் மூழ்கடிக்க முயன்றுள்ளார். அப்பகுதி மக்கள் இருவரையும் தடுத்து குழந்தையை மீட்டு காவல் துறைக்கு தகவல் அளித்தனர். மேலும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 31, 2026
பெண் திடிர் மரணம், போலீசார் விசாரனை

ராணிபேட்டை மாவட்டத்தை சேர்ந்த தேவி 43, இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஜன-29 திடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


