News September 8, 2024

ஓசூரில் நீதிமன்ற விநாயகர் வைத்து பூஜை

image

ஓசூர் ஸ்ரீநகரை சேர்ந்த இளைஞர் குழுவினர் நேற்று சென்னை ஐகோர்ட்டு போன்று விநாயகர் அரங்கு செட் அமைத்து கோர்ட்டில் நீதிபதியாகவும், மற்றும் வக்கீல்கள், போலீசார் என 14 விநாயகர்கள் நீதி பரிபாலனை செய்யும் வகையில் செட் அமைத்திருந்தனர். கோர்ட்டில் நீதிபதியாகவும், வழக்காடும் விநாயகர்கள், குற்றவாளி கூண்டில் எலி வாகனம், கோர்ட்டு வளாகத்தில் காந்தி சிலை, இருப்பது போன்று தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.

Similar News

News August 27, 2025

கிருஷ்ணகிரியில் கடன் தீர்க்கும் கணபதி!

image

கிருஷ்ணகிரி, பாகலூரில் அமைந்துள்ளது அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில். இங்கு மூலவரான விநாயகர் ஆவுடை மீது வலது கையில் உடைந்த தந்ததுடனும் இடது கையில் கொழுக்கட்டையுடன் அருள்பாலிக்கிறார். கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவரை ‘கடன் தீர்க்கும் கணபதி’ என அழைக்கின்றனர். ஷேர்!

News August 27, 2025

ஓசூரில் பைக்கில் மெதுவாக செல்ல சொன்னவர் கொலை!

image

கிருஷ்ணகிரி, ஓசூர், தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த வெங்கட்ராஜ் (32) வசிக்கும் தெரு வழியாக, 15 வயது சிறுவன் அடிக்கடி பைக்கில் வேகமாக சென்றதால், வெங்கட்ராஜ் சிறுவனை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார். இதில் நவீன்ரெட்டி, அஸ்லம், 15, 18 வயது சிறுவன் என நான்கு பேரை நேற்று (ஆகஸ்ட் 26) போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 5 பேரை தேடி வருகின்றனர்.

News August 27, 2025

இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <>இங்கே கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். எந்த ஊர், என்ன பூஜை, என்ன படையல் உள்ளிட்ட விவரங்களோடு செய்தியாக பதிவிடுங்கள். அனைவருக்கும் இனிய விநாயர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

error: Content is protected !!