News April 16, 2024
ஓசூரில் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

ஓசூர், கேசிசி நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக அப்பகுதி குடியிருப்பு மக்களுக்கு தண்ணீர் வழங்காத காரணத்தால், பல்வேறு தரப்பு சார்பாக மாவட்ட நிர்வாகத்திடமும், பேரூராட்சி நிர்வாகத்திலும் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தற்பொழுது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அப்பகுதி மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம் என தங்களது வீடுகளில் பதாகைகளை வைத்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது

கெலமங்கலம் அடுத்த கோவிந்தபள்ளியை சேர்ந்தவர் சரவணன் மனைவி அம்பிகா. தற்காலிக சத்துணவு சமையலராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி, தன் கணவர் சக்திவேலுவுக்கும், அம்பிகாவிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அஸ்வினி, கோவிந்தப்பள்ளி பகுதியில் வைத்து அம்பிகாவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் அஸ்வினியை கைது செய்தனர்.
News April 18, 2025
கிருஷ்ணகிரி ட்ரெக்கிங் பிரியர்களுக்கு சூப்பர் ஸ்பாட்

கிருஷ்ணகிரியில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது பிலிகுண்டுலு ராசிமணல் மலையேற்றம். தற்போது வனத்துறை மூலம் பிலிகுண்டுலுவில் தொடங்கி, ராசிமணல் வன முகாம் வரை ட்ரெக்கிங் அழைத்து செல்லப்படுகிறது. இயற்கை எழில் நிறைந்த பயணம் புதிய அனுபவம் தரும். இதற்கு trektamilnadu.com என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்து ட்ரெக்கிங் செல்லலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணி ட்ரெக்கிங் பிளான் பண்ணுங்க
News April 18, 2025
சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கிருஷ்ணகிரியில் காலியாக உள்ள 732 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.<