News February 16, 2026
ஓசூரில் துணிகர சம்பவம்!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த உதயகுமார் (22) ஓசூரில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மூக்கண்டப்பள்ளி இ.எஸ்.ஐ. ரிங் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த நபர் உதயகுமாரை மிரட்டி ரூ.300 மற்றும் செல்போனை வழிப்பறி செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்த உஸ்மர் (24) என்பது தெரியவந்தது.
Similar News
News February 19, 2026
கிருஷ்ணகிரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப்-20 அன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதில் ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
கிருஷ்ணகிரியில் கூண்டோடு கைது!

கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் 15-வது நாளாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய அண்ணா சிலை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற 260 அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
News February 19, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.19) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்


