News January 19, 2026
ஒற்றை காலில் நிற்பது மிகவும் நல்லது

ஒற்றைக் காலில் நிற்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒற்றைக் காலில் நிற்பது ஒரு எளிய உடற்பயிற்சி போல் தோன்றினாலும், அது உடல் சமநிலை, தசை வலு, மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. வயதுடன் குறையும் தசை இழப்பு, கீழே விழும் ஆபத்து போன்ற அபாயங்களை இது குறைக்க உதவுகிறது. தினசரி பழக்கங்களில் இதைச் சேர்த்தால், உடலும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும்.
Similar News
News January 24, 2026
திண்டிவனத்தில் கிடந்த ஆண் சடலம்!

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கீழ்பாதி மேம்பாலம் அருகே 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? போன்றவை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 24, 2026
எந்த தகுதியும் இல்லாதவர் உதயநிதி: EPS

இளைஞரணி தலைவர், MLA, அமைச்சர், DCM என எந்த தகுதியும் இல்லாத உதயநிதியை CM ஸ்டாலின் ஆளாக்கிவிட்டார் என்று EPS விமர்சித்துள்ளார். அடுத்து எந்த காலத்திலும், எந்த பதவிக்கும் கருணாநிதி குடும்பம் வர முடியாது என்ற அவர், இந்த தேர்தல் தான் திமுகவுக்கு இறுதியான தேர்தல் என்றார். மேலும், தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம் எனவும் எம்ஜிஆர், அம்மா இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.
News January 24, 2026
இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

இஞ்சி டீ-யில் மருத்துவ குணங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சியின் தினசரி பயன்பாடு 4 கிராமுக்கு மேல் சென்றால் வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், பித்த நீர் அதிகமாக சுரக்கும் என்பதால் பித்தப்பை கல் பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.


