News December 25, 2025

ஒரே வீட்டில் 44 பேர் எரித்துக் கொலை.. ஓயாத ஓலம்

image

1968-ல் விவசாய கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக, பண்ணையாரின் அடியாட்களால் ஒரு கிராமமே தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயந்து ஓடிய பெண்கள், குழந்தைகள் தப்பித்துக்கொள்ள ராமையா என்பவரது வீட்டிற்குள் சென்றனர். ஆனால், அந்த வீடு தாழிடப்பட்டு தீ வைத்ததில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த ஆறாத வடுவான கீழ்வெண்மணி படுகொலை நடந்த தினமான இன்றும், அவர்களது அலறல்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

Similar News

News December 28, 2025

சொகுசு கப்பலில் தவிக்கும் 123 பேர்!

image

பப்புவா நியூ கினியில் உள்ள பாறையில் மோதி தரைதட்டிய ஆஸி. சொகுசு கப்பல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கெயின்ஸிலிருந்து டிச.18 அன்று புறப்பட்ட அந்த கப்பலில் 80 பயணிகள், 43 ஊழியர்கள் உட்பட 123 பேர் உள்ளனர். வரும் டிச.30 உடன் பயணம் முடிவடைய இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதே கப்பலில் கடந்த அக்டோபரில் பயணித்த 80 வயது மூதாட்டி மரணமடைந்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

News December 28, 2025

40 வயதில் 40 கோல்கள்: ரொனால்டோ சாதனை!

image

கால்பந்து வரலாற்றிலேயே அதிகமுறை, ஒரு ஆண்டில் 40-க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2010 முதல் 2025 வரை, 2019-ம் ஆண்டை தவிர மொத்தம் 14 முறை, அவர் 40-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். 40 வயதானாலும், களத்தில் தனது வேகத்தாலும், கோல்களாலும் இன்னும் கால்பந்து உலகை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். 13 முறையுடன் மெஸ்ஸி 2-வது இடத்தில் உள்ளார்.

News December 28, 2025

உங்க ஆதார் தவறாக யூஸ் பண்றாங்க என சந்தேகமா?

image

உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் ★myAadhaar போர்ட்டலுக்கு சென்று, மொபைல் எண்ணுடன் Login செய்யுங்க ★மெனுவில் ‘Authentication History’-ஐ தேர்ந்தெடுக்கவும் ★ஆதார் பயன்பாட்டு விவரங்கள் அறிய, தேதி வரம்பைத் தேர்வு செய்து பயன்பாட்டை அறியுங்கள் ★அப்படி சந்தேகமான செயல்பாடு தெரிந்தால், 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்தோ அல்லது help@uidai.gov.in -க்கு மின்னஞ்சல் அனுப்பவும். SHARE.

error: Content is protected !!