News June 18, 2024

ஒரே வாரத்தில் ரூ 5 கோடி அதிகரிப்பு ! ஏறுமுகத்தில் தேயிலை ஏலம்

image

நீலகிரி தேயிலை ஏலத்தில், வரத்து விற்பனை ஏற்றம் கண்டு ஒரே வாரத்தில், 5.25 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த வாரத்தை விட 3.20 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. மேலும் 2.59 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது.இதனால் 90.66 சதவீதம் தேயிலை தூள் விற்றது. டீ தூள் ஏலத்தில் சராசரி விலை கிலோவுக்கு ரூ.105 கிடைத்துள்ளது. இதன் காரணமானாக வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Similar News

News April 3, 2026

நீலகிரி: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

image

நீலகிரி மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in<<>> இணையதளம் அல்லது ‘Know Your Candidate’ (KYC) செயலி வழியாக எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க!

News April 3, 2026

மத்திய அமைச்சரின் நீலகிரி வழக்கு ரத்து!

image

2024 மக்களவை தேர்தலின் போது, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட அமைச்சர் எல்.முருகன் மீது அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக இரு வழக்குகள் பதியப்பட்டன. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

News April 3, 2026

கூடலூர் சோதனை சாவடியில் ரூ. 22.82 லட்சம் பறிமுதல்

image

கூடலூர்-கர்நாடக எல்லையில் உள்ள கக்கன்நல்லா சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் நோக்கி சென்ற காரிலிருந்து ரூ. 22.82 லட்சம் ரொக்க பணம் கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கூடலூர் கோட்டாட்சியர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!