News July 6, 2024

ஒரே போன்காலில் வாழ்க்கையை மாற்றிய முதல்வர்

image

‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தின் கீழ், செங்கல்பட்டைச் சேர்ந்த அருள் என்ற மாற்றுத்திறனாளியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகத் தொடர்புகொண்டு அவரது கருத்துகளை கேட்டறிந்தார்.இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பேட்டரி ஸ்கூட்டர், 1 லட்சம் கடனுதவி மற்றும் ரூ.2000 ஆக மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார்.

Similar News

News August 5, 2025

செங்கல்பட்டு மாவட்ட குறுவட்ட தடகள போட்டிகள்

image

செங்கல்பட்டு குறுவட்ட தடகளப் போட்டி இன்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குறுவட்ட தடகள போட்டிகளில் 34 பள்ளிகள் 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

News August 5, 2025

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

News August 5, 2025

செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

image

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!