News April 29, 2024

ஒரே நாளில் 26 வழக்குகள் பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 28)  காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 137 மதுபாட்டில்கள், 160 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஒரே நாளில் 26 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

Similar News

News August 20, 2025

வேலூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்

image

வேலூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 21 ) மின்பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வேலூர் டவுன், பைபாஸ்ரோடு, தோட்டப்பாளையம், சலவன்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், விருதம்பட்டு, செங்காநத்தம்ரோடு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன், சார்பனாமேடு, சைதாப்பேட்டை பி.டி.சி.ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்

News August 20, 2025

வேலூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்! (2/2)

image

இத்திட்டத்தின் மூலம் 60% சிறுபான்மையினர் மற்றும் 40% இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோர் பயனடையலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க
▶️ வருமானச் சான்றிதழ்
▶️ சாதிச் சான்றிதழ்
▶️ பள்ளி மாற்றுச் சான்றிதழ்
▶️ இருப்பிடச் சான்றிதழ்
▶️ குடும்ப அட்டை
▶️ ஆதார் அட்டை
▶️ பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க..

News August 20, 2025

வேலூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்! (1/2)

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் தொழில் தொடங்க சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், தனிநபர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட இடங்களில் இதற்கான விண்ணப்பங்களை பெறலாம். ஷேர் பண்ணுங்க. <<17460213>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!