News June 2, 2024
ஒரே நாளில் 10 மணி நேரம் மின்தடை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள எரவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஜூன்.1 (10 am – 3pm, 7 மணி முதல் ) 10 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது . மழை விட்டு 2 மணி நேரமாகியும் மின் இனைப்பு வராததால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அதம்பார் துனை மின்நிலையத்தில் தொடர்பு கொண்டும் பயனில்லை என மக்கள் தெரிவித்தனர்.
Similar News
News August 21, 2025
திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க வாய்ப்பு

திருவாரூர் இளைஞர்களே.. சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News August 21, 2025
திருவாரூர்: தமிழக போலீசில் வேலை

திருவாரூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News August 21, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட கீழநம்மகுறிச்சி சமுதாயக்கூடம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மூன்று மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதேபோல, மன்னார்குடி தாலுக்காவிற்கு உட்பட்ட உள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள விகேஎஸ் திருமண மண்டபத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.