News January 19, 2026
ஒரே கோயிலில் 3 ரூபங்களில் காட்சி தரும் சிவன்

பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதராக என 3 ரூபங்களில் சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் ஈசன் காட்சியளிக்கிறார். 3 அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். நடு அடுக்கில், தோணியப்பர் உள்ளார். 3-வது தளத்தில் சட்டநாதராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Similar News
News March 30, 2026
நாளை மறுநாள் பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் ஆணை

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை மறுநாள் (ஏப்.1-ம் தேதி) தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT
News March 30, 2026
1 கேஸ் சிலிண்டர் ₹6,500.. அதிர்ச்சி தகவல் வெளியானது

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. ஆனால், சென்னையில் தட்டுப்பாடு காரணமாக வணிக சிலிண்டர் கள்ளச் சந்தையில் ₹6,500 வரை விற்கப்பட்டு வருவதாக ஹோட்டல் நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், உணவு பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். உங்க ஊரில் டீ, காஃபி விலை உயர்த்தப்பட்டுள்ளதா?
News March 30, 2026
ஈரான் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவோம்: டிரம்ப்

ஈரானின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், ஈரானின் ஆயில் ஏற்றுமதி மையமாக உள்ள கர்க் தீவை அமெரிக்கா கைப்பற்றக்கூடும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வருகிறது.


