News March 18, 2025
ஒரு வாரத்தில் மட்டும் ரூ.3.53 லட்சம் அபராதம் விதிப்பு

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரத்தில் 225 இடங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் 260 வாகனங்கள் மற்றும் 400 கடைகளிலும், 586 கல்வி நிறுவனங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் 3.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்.
Similar News
News March 21, 2025
சேலம் அருகே துயர நிகழ்வு

சேலம் மாவட்டம் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஓட்டுநர் ஜெயவேல்(26) இன்று (மார்ச் 21)பள்ளி வேலை எடுத்துக்கொண்டு பணிக்கு செல்வதற்காக வேனை இயக்கிய போது தந்தையை பார்ப்பதற்காக ஒன்றரை வயது குழந்தை ரோஹித் ராஜ் வேனின் பின்புறம் வந்தது இதனை அறியாமல் வேனை பின்னோக்கி இயக்கியதில் சக்கரத்தில் நசுங்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
News March 21, 2025
சேலம் மாநக இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது ரவுடிகள் தொல்லை இருந்தாலும் கீழ்கண்ட எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல் துறை சார்ந்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
News March 21, 2025
சேலத்தை கலக்கும் ‘குளுகுளு’ ஆட்டோ

சேலம் குரங்குசாவடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி(74) . இவர் தனது ஆட்டோவின் கூரையில் சோளத் தட்டு மற்றும் வைக்கோல் கட்டி அதன் மீது குளிர்ந்த தண்ணீரை தெளித்து, வலம் வருகிறார். அதேபோல் சிறிய தண்ணீர் டேங்க், மொபைல் சார்ஜிங் பாயிண்ட், ஃபேன் ஆகியவற்றை ஆட்டோவில் இணைத்துள்ளார். சேலத்தை கலக்கும் இந்த ஆட்டோ குறித்து உங்கள் கருத்து என்ன?