News November 11, 2025

ஒரு மரணம்… நிலைகுலைந்து போன 8 பேரின் கனவுகள்!

image

டெல்லி குண்டுவெடிப்பு, பல குடும்பங்களை சிதறடித்துவிட்டது. தாய், சகோதரர், மனைவி, 4 குழந்தைகளின் கனவுகளை பூர்த்தி செய்து வந்த அசோக் என்பவரை இன்று அக்குடும்பம் இழந்துவிட்டது. பகலில் பஸ் கண்டக்டராக, இரவில் செக்யூரிட்டியாக ஓயாது உழைத்து கொண்டிருந்தவரின் உயிரை குண்டுவெடிப்பு பறித்துவிட்டது. லோகேஷ் என்ற நண்பரை அழைத்து வர சென்ற பயணம், அசோக்கின் இறுதி பயணமாகிவிட்டது. இந்த கண்ணீருக்கு யார் பதில் சொல்வது?

Similar News

News November 11, 2025

தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் இவரா?

image

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் ஷஹீன் ஷாஹித், தீவிரவாத செயல்களை மறைக்க டாக்டராக செயல்பட்டு வந்ததாக உளவுத் தகவல் கூறுகிறது. லக்னோவில் இருந்தபடி அவர், தீவிரவாதத்திற்கு ஆதரவாக நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்தியாவில் பெண்களை மூளைச்சலவை செய்து ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு ஆள் சேர்க்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

News November 11, 2025

சற்றுமுன்: தங்க மகன் காலமானார்

image

ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ‘தங்க மகன்’ விஷ்ணு ரகுநாதன்(27) விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஷ்ணுவும், அவருடன் சென்ற மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. 2024-ல் ஹாங்காங் ஆசியக் கோப்பை தொடரில் படகு போட்டியில்(kayaking) தங்கம் வென்று விஷ்ணு அசத்தியது குறிப்பிடத்தக்கது.

News November 11, 2025

‘நாங்கள் இந்தியர்கள்’ கைதான முஜாமிலின் சகோதரர்

image

ஃபரீதாபாத்தில் வெடிபொருள்கள் வைத்திருந்ததாக கைதான டாக்டர் முஜாமிலின் சகோதரர் ஆசாத் ஷகில், ‘நாங்கள் மனதார இந்தியர்கள், இந்தியாவுக்காக கல்வீச்சுக்கு ஆளானோம்’ என்று கூறியுள்ளார். எல்லோரும் அவரை ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இச்சம்பவத்தால், தனது சகோதரியின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!