News November 9, 2025
ஒரு செம்மரத்தை கூட இனி தொட முடியாது: பவன் கல்யாண்

பல ஆண்டுகளாக ஆந்திராவில் செம்மர கடத்தல் நடைபெற்று வருகிறது. கடத்தல் சம்பவம் தொடர்பாக ஏராளமான தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், செம்மர கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர DCM பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்பட உள்ளதாக கூறிய அவர், ஒரு செம்மரத்தை கூட இனி யாரும் தொட துணிய மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
SIR-ல் ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகக்கூடாது: CM ஸ்டாலின்

SIR பணிகளால் தகுதியான ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய அவர், ED, CBI உள்ளிட்டோரும் நமக்கு எதிராக தயாராகி கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என நினைப்போரது சூழ்ச்சிகளை தகர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.
News November 9, 2025
உங்க கையிலும் பணம் அதிகமாக புழங்கணுமா?

பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அக்கனவை நினைவாக்க, இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க ✱சம்பளம் அதிகரித்தால், உடனே செலவை அதிகரித்துவிட வேண்டாம் ✱தினமும் என்ன செலவு செய்கிறோம் என்பதை ஒருவாரத்திற்கு குறிப்பு எடுங்கள். இது தேவையற்ற செலவுகளை கழிக்க உதவும் ✱சிறிய தொகை என்றாலும் சேமியுங்கள் ✱ஆன்லைனில் தள்ளுபடியில் கிடைக்கிறது என தேவையற்ற பொருள்களை வாங்கி குவிக்க வேண்டாம். SHARE IT
News November 9, 2025
ஆட்டத்தை தொடங்கிய அடுத்த அதிமுக தலைவர்!

10 படங்கள் நன்றாக ஓடினாலே CM ஆகலாம் என்ற மாயையில் யார் யாரோ புதிதாக கிளம்பியுள்ளனர் என நடிகர் விஜய்யை நத்தம் விஸ்வநாதன் மறைமுகமாக சாடியுள்ளார். புதிதாக கட்சி தொடங்கியவுடன் நான்தான் CM எனக் கூறுவதைப் பற்றி மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக Ex அமைச்சர் <<18226778>>KP முனுசாமியும்<<>>, சினிமா மாயையில் சிலர் கிளம்பியுள்ளதாக விஜய்யை விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.


