News December 12, 2025
ஒரு கூட்டு கிளியாக.. அண்ணன் தம்பினா இப்படி இருக்கணும்

வயதான பெற்றோரை சிலர் புறக்கணிக்கும் இக்காலத்தில், தாயை நான் தான் கவனிப்பேன் என சகோதரர்கள் பாச போராட்டம் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. வேலைக்கு செல்லாமல் இருக்கிறார் அண்ணன். தம்பியோ, பண வசதியுடன் வேலையிலும் இருக்கிறார். ஆனால், ‘இரு மகன்களும் எனது இரு கண்கள்’ என்றார் பாசத் தாய். இறுதியில் பண வசதியுடன் உள்ள தம்பியிடமே உரிமையை ஒப்படைக்கிறது கோர்ட். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News April 5, 2026
அதிமுகவில் இணைந்த தவாக வேட்பாளர்.. வேல்முருகன் ஷாக்!

வேப்பனப்பள்ளி தொகுதி தவாக வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான தி.க.குமார், KP முனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் 200-க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இணைந்தார். திமுக கூட்டணியில் இருந்து பிரிந்த தவாக பெரிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தேர்தலில் களம் காண்கிறது. இந்நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்பாளரான தி.க.குமார் அதிமுகவுக்கு சென்றது வேல்முருகனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News April 5, 2026
PM மோடி கட்டுப்பாட்டில் பினராயி: ராகுல் காந்தி

கேரள CM பினராயி விஜயன் PM மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், போதைப் பொருள்களின் களஞ்சியமாக கேரளா மாறிவிட்டதாகவும், 75% விவசாயிகள் கடனில் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், கேரளாவில் இடதுசாரி கூட்டணி மதவாதத்தில் மூழ்கிவிட்டதாகவும், RSS உடன் ரகசிய கூட்டணி அமைத்து இயங்கி வருவதாக கடுமையாக சாடியுள்ளார்.
News April 5, 2026
நயினாரால் அண்ணாமலைக்கு சீட் தரவில்லை: KAS

நயினார் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவதால்தான் அண்ணாமலைக்கு சீட் தரவில்லை என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவுக்கு 11% ஆக இருந்த வாங்கு வங்கி தற்போது 5% ஆக குறைந்துவிட்டதாகவும், கட்சி தலைவர்களை தரக்குறைவாக பேசி வரும் எடப்பாடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். அண்ணாமலை விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், செங்கோட்டையன் நயினாரை காரணமாக குறிப்பிட்டுள்ளார்.


