News December 31, 2025
ஒருவருக்கு ₹13.48 கோடி சம்பளம் வழங்கும் OpenAI!

உலகிலேயே டெக் ஸ்டார்ட்அப்களில் அதிக சம்பளம் வழங்கும் நிறுவனமாக OpenAI உள்ளதாக The Wall Street Journal தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தில் மொத்தம் 4,000 பேர் வேலை செய்யும் நிலையில், பங்குகள் அடிப்படையில் ஊழியர்களுக்கு சராசரியாக ₹13.48 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. உலகின் 18 பெரிய டெக் நிறுவனங்கள் IPO வெளியிடுவதற்கு முன் வழங்கும் சராசரி ஊதியத்தை விட இது 34 மடங்கு அதிகமாகும்.
Similar News
News February 10, 2026
இனி ₹50,000 டிரான்சாக்ஸனுக்கு பான் தேவையில்லை..

இதுவரை ₹50,000-க்கு மேல் பணப் பரிமாற்றம் செய்தால் பான் எண்ணை குறிப்பிட வேண்டியிருந்தது. இந்நிலையில், வரைவு வருமான வரி விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின்படி, ₹10 லட்சம் வரையிலான பரிமாற்றத்திற்கு பான் எண் தேவையில்லை. அதேபோல், ₹5 லட்சத்துக்கு மேல் பைக், கார் வாங்கினாலும், ஓட்டலில் ₹1 லட்சத்துக்கு மேல் பில் இருந்தால் பான் எண்ணை குறிப்பிட வேண்டும். இந்த விதிகள் ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது.
News February 10, 2026
தேவாலயங்கள் + சொத்துகள்.. HC முக்கிய உத்தரவு

CSI தூத்துக்குடி – நாசரேத் மறை மாவட்ட தேர்தல் வழக்கு தொடர்பாக சென்னை HC முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில்கள், மசூதிகளுக்கு அறநிலையத் துறை, வக்ஃப் வாரியம் இருப்பது போல் தேவாலயங்களுக்கு இல்லை. மேலும், தேவாலயங்களுக்கு கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என பல சொத்துகள் இருப்பதால் அவற்றை நிர்வகிக்க ஏன் சட்டப்பூர்வ அமைப்பை உருவாக்கக் கூடாது என்பதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு HC உத்தரவிட்டுள்ளது.
News February 10, 2026
முருகன் வேல் எங்கள் கையில் உள்ளது: அமைச்சர் ரகுபதி

ராமா ராமா என்று சொன்னவர்களை எல்லாம் முருகா முருகா என்று ஓடவிட வைத்திருப்பது தமிழக மக்களின் பக்தி என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முருகன் பெயரை சொன்னால்தான் எடுபடும் என முருகனை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும், ஆனால் முருகனின் வேல் தங்கள் கையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ராம கோஷம், முருக கோஷம் என எந்த வழியில் வந்தாலும் TN மக்களை திசை திருப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


