News August 17, 2025
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு 6 மையங்களில் இன்று(ஆக.17) நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1,823 பேர் எழுதினார். வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார், ஆய்வின்போது வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் உடன் இருந்தார். தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது
Similar News
News August 17, 2025
வேலூரில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை

புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். வேலூரில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <
News August 17, 2025
வேலூரில் கத்தரிக்காய் விலை உயர்வு

வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு இலவம்பாடி, ஒடுகத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கத்தரிக்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரங்களில் 1 கிலோ ரூ.40 – ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்போது விலை உயர்ந்துள்ளது. இதனால், ரூ.60 – ரூ.70 வரை தரத்துக்கு ஏற்றார்போல் விற்பனை செய்யப்படுகிறது. ஆடி மாதம் முடிவடைவதால், ஓரிரு நாட்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
News August 17, 2025
வேலூரில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு…

வேலூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <