News October 28, 2024
ஒரத்தநாட்டில் 1 டன் குட்கா பறிமுதல்

தஞ்சையில் போதைப்பொருட்களுக்கு எதிராக தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் சுதா தலைமையில் உதவி ஆய்வாளர் விஷ்ணுபிரியா மற்றும் காவலர்கள் அடங்கிய குழு அதிரடி சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 1070 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு ரஹமத்துல்லா, சுரேஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
தஞ்சை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

தஞ்சை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
தஞ்சை: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
தஞ்சை: கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா அருகே ஈச்சங்கோட்டையில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடிச் சென்றனர். இதுகுறித்து ஓரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


