News November 20, 2025
ஒப்பந்த அடிப்படையில் அரசு உதவி வக்கீல்கள் நியமனம்

புதுவை கோர்ட்டில் காலியாக உள்ள உதவி அரசு வக்கீல்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் பட்டு வருகின்றன. அதன்படி, புதுச்சேரி குற்றவியல் கோர்ட்டு உதவி அரசு வக்கீல்களாக இளங்கோவன், ஜெரால்ட் இமானுவேல், தேவேந்திரன், மகிளா கோர்ட்டு அரசு உதவி வக்கீலாக ஜெயமாரிமுத்து, காரைக்கால் குற்றவியல் கோர்ட்டு அரசு உதவி வக்கீலாக ஏசுராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேற்கண்ட தகவல் புதுவை அரசாணையில் வெளியிடப்பட்டது.
Similar News
News November 20, 2025
காரைக்காலில் சிறுபான்மையினர் விழா அமைச்சர் பங்கேற்பு

சிறுபான்மையோர் தின விழா இன்று (20.11.2025) தருமபுரம் மேல புத்தமங்கலம் இமாக்குலேட் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் திருமுருகன், எம்எல்ஏ ராஜசேகரன் கலந்துகொண்டனர். இதில் காரைக்கால் மகளிர் மேம்பாட்டு துறை நலத்திட்ட அதிகாரி, கிருஷ்ணவேணி, கல்லூரி முதல்வர் அருட் சகோதரி காணிக்கை ஆரோக்கியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
News November 20, 2025
காரைக்கால் மருத்துவமனை முன்பு சாலை மறியல்

காரைக்காலில் விழிதியூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா என்கின்ற நபர் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த கருப்பையா மீது காரைக்கால் போக்குவரத்து போலீசார் அதிவேகமாக வந்ததாகவும், அவர் மது அருந்திவிட்டு வந்ததாகவும் பொய்யான வழக்கை பதிவு செய்ததை கண்டித்து,, உயிரிழந்த கருப்பையா உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News November 20, 2025
புதுவை: இதற்கு டிச.10-ம் தேதியே கடைசி நாள்!

ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், “பொங்கல் வேட்டி, சேலை திட்டத்தில் பயன்பெற 18 வயது பூர்த்தி அடைந்த புதிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் குடும்பத்தினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்று, வரும் 10.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.


