News July 22, 2024
ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம்

சிவகங்கை வாரச்சந்தை கட்டுமான பணியை ஒப்பந்த தேதிக்குள் முடிக்காததால் ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி கமிஷனர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 2022-23ம் ஆண்டு நகர் புற மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டுமான பணி நடந்து வருகிறது. ஒப்பந்ததாரர் இப்பணியை ஏப்., மாதத்திற்குள் முடிக்கவில்லை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… <
News August 14, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.93,000 த்தில் அரசு வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் Generalist Officer பணிக்கு 500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி அல்லது CA முடித்தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து, 13.08.2025 முதல் 30.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை, வேலை தேடும் உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.
News August 14, 2025
காரைக்குடியில் ரயில்வே தண்டவாளத்தில் சோதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாளை 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இருப்புப் பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சவுதாமா, உதவி ஆய்வாளர் சேவகன், மற்றும் காவலர்கள் சகிதம் காரைக்குடி ரயில் நிலைய பார்சல் அலுவலகம் மற்றும் டூவீலர் பார்க்கிங் ஏரியாவில் காரைக்குடி ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து BDDS சோதனை இன்று (ஆகஸ்ட் 14 ) செய்தனர்.