News May 21, 2024

ஒன்றுகூடி தேர் இழுத்த பக்தர்கள்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை மலையின் மீது அமைந்துள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் எம்.ஜி.ஆர் நகர் மகா மாரியம்மன் ஆலய ரத உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் இன்று முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News August 22, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

விழுப்புரத்தில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

விழுப்புரம் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம்<<>> மூலம் நீங்கள் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News August 22, 2025

விழுப்புரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் உடற்கல்வி ஆசிரியர் கைது!

image

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சிவபாலன். பள்ளி மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (ஆகஸ்ட் 22) பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் சிவபாலனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!