News September 5, 2024

ஒன்றரை வயது பெண் குழந்தை நீரில் மூழ்கி பலி

image

பாணாவரம் அடுத்த போளிப்பாக்கம் ரோட்டு தெருவை சேர்ந்த ரேவதி-கார்த்திக் தம்பதியரின் ஒன்றரை வயது பெண் குழந்தை இன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளது. அப்போது வீட்டில் வைத்திருந்த பக்கெட் தண்ணீரில் தவறி விழுந்து மூச்சு திணறி மயங்கியது. வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 9, 2025

நல்லாசிரியர்களுக்கு அமைச்சர் வாழ்த்து

image

பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 ஆசிரியர்கள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா கலந்து கொண்டனர்.

News September 9, 2025

ராணிப்பேட்டை: போதையில் குளத்தில் தவறி விழுந்தவர் பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம், விஷாரம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்த சரவணன் விஷாரம் குளத்து மேட்டு பகுதியில் உள்ள பூங்காவில் மது அருந்தி, போதையில் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். ஆற்காடு நகர போலீசார் உடலை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News September 9, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு வருகிறார் விஜய்

image

தவெக தலைவர் விஜய், சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி தனது முதல் அரசியல் பிரச்சார பயணத்தை 13/09/25 திருச்சியில் தொடங்கிறார். இதைதொடர்ந்து, தி.மலை, விழுப்புரம் அதன் பின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 18/10/25 அன்று வருகை தந்து, மக்களிடையே கலந்துரையாட உள்ளார்.

error: Content is protected !!