News February 21, 2025
ஒட்டன்சத்திரம் நகை திருடிய பெண் கைது

பழனியைச் சோ்ந்தவர் சங்கீதா (37). இவா் ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வத்தலகுண்டு செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்தாா். பின்னா், பேருந்துக்காக காத்திருந்த அவரிடமிருந்த 8 பவுன் தங்க நகையை அடையாளம் தெரியாத பெண் ஒருவா் திருடிக் கொண்டு மாயமானாா். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்
Similar News
News August 13, 2025
திண்டுக்கல்: எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி

திண்டுக்கல் அருகே, கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட கணவன் அசோக்குமார் மீது, மனைவி அபிநயா மற்றும் அவரது 15 வயது மகன் ஆகியோர் காய்ச்சி வைத்திருந்த சுடு எண்ணெயை அவர் மீது ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். செம்பட்டி போலீசார் மனைவி மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 13, 2025
திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடைகள் இயங்காது

திண்டுக்கல் மாவட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 15.08.2024 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன்தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
திண்டுக்கல்: இலவச தையல் மெஷின் வேண்டுமா ? FREE

திண்டுக்கல் மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை<